தலைமை



திரு. K.M.தேவன் நிறுவனத்தலைவர்
திரு. K. M. தேவன் B.C.A.,B.L.,
மக்கள் முரசு கட்சி நிறுவனத்தலைவர் K.M.தேவன் அவர்கள் சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கார் அரசு
சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார். 2016 ம் ஆண்டு சமூக சட்ட சேவை அமைப்பு என்ற இயக்கம் ஆரம்பித்து பொது மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், எளிய மக்களுக்காகவும் நீதிமன்றத்தில் வாதாடி அவர்களுக்கு நீதியை சட்டப்படி பெற்றுக்கொடுத்தார். எந்த வித அரசியல் பின்புலமும், ஊடக பின்புலமும், சாதிய பின்புலமும் இல்லாமல் தன்னுடைய உழைப்பையும், மக்களையும் நம்பி அரசியல் கட்சியை ஆரம்பித்து பம்பரமாய் தமிழகத்தில் சுழன்று வருகின்றார்.
சாதி, மதம், இனம், மொழி என்று மக்களை பிளவு படுத்துவதை நீர்த்து போக செய்து சமத்துவமாய், சகோதரத்துவமாய் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம், சுகாதாரம், பொருளாதாரம் என அனைத்தும் உயர்வு காணவும், ஊழலற்ற, நேர்மையான மக்கள் ஆட்சியை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என உயரிய நோக்கத்தோடு தொடங்கப்பட்ட அரசியல் கட்சி ஆகும்.
தமிழக மக்களே வாருங்கள், சமுதாயத்தில் மாற்றம் காண, பொருளாதாரத்தில் ஏற்றம் காண, நமக்கான அரசியல் களத்தை நாமே முன்னெடுப்போம். நமக்காகவும் நம்முடைய தலைமுறைக்காகவும்.



- திரு. K. பிரபாகர் மாநில பொதுச்செயலாளர் / தலைமை நிலைய செயலாளர்
திரு. K. பிரபாகர் B.A.B.L.,
திரு. K. பிரபாகர் தற்போது மக்கள் முரசு கட்சி (MMK)யின் மாநில பொதுச் செயலாளராக பணியாற்றி வருகிறார். கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் ஒருமித்தமாக இணைக்கும் திறமையான ஒருங்கிணைப்பாளராக அவர் விளங்குகிறார். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நடைபெறும் கட்சி கூட்டங்களில் அவர் தெற்கமாக பங்கேற்று, முக்கிய தீர்மானங்களை எடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறார்.
திரு. கே. பிரபாகரின் வழிகாட்டுதலின் கீழ் மக்கள் முரசு கட்சி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை காண்கிறது. கட்சியின் அடிப்படை கொள்கைகளை வலுப்படுத்துவதிலும், சமூக நீதியை நிலைநாட்டுவதிலும், உறுப்பினர்கள் மத்தியில் ஒற்றுமையை உறுதிப்படுத்துவதிலும் அவர் மிகுந்த பங்காற்றுகிறார். அவரது கடின உழைப்பு, திட்டமிட்ட செயல்கள் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மூலம், மக்கள் முரசு கட்சி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வலுவடைந்து வருகிறது.
அவரது முழுமையான பணி மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக, மக்கள் முரசு கட்சி சமூக நலனுக்காக செயலாற்றும் ஒரு சக்திவாய்ந்த இயக்கமாக மாறியுள்ளது. திரு. கே. பிரபாகரின் தலைமையின் கீழ், கட்சி தன்னம்பிக்கையுடன் மற்றும் உறுதியுடன் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது.