மமுக | மக்கள் முரசு கட்சி

மக்கள் முரசு கட்சி

எங்கள் கொள்கைகள்

மக்கள் முரசு கட்சி, ஒவ்வொரு குடிமகனும் சமத்துவம், மரியாதை மற்றும் சமமான வாய்ப்புடன் வாழும் ஒரு நேர்மையான மற்றும் முன்னேற்றமயமான சமூகத்தை கட்டியெழுப்ப உறுதியுடன் செயல்படுகிறது. எங்கள் தலைவர்கள் காட்டிய வழியையே ஒளியாய் கொண்டு, தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் மக்களின் கோரிக்கைகளையும் பிரதிபலிக்கும் முக்கிய கொள்கைகளை இங்கே வழங்கியுள்ளோம். சமூக நீதி, பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நேர்மையான ஆட்சித்துறை எங்கள் பிரதான குறிக்கோள்கள் ஆகும்.

  1. சாதி, மதம், இனம், மொழி என்று மக்களை பிளவு படுத்துவதை நீர்த்து போக செய்து சமத்துவமாய், சகோதரத்துவமாய் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைப்போம். 
  2. ஊழலற்ற, நேர்மையான மக்கள் ஆட்சியை மக்களுக்கு ஏற்படுத்திக் மக்கள் நலனை மேம்பட பாடுபடுவோம் .
  3. உலகத்தரம் வாய்ந்த கல்வியை நமது அரசு பள்ளிகளில் நியாமான குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கு கொடுப்போம். தனியார் பள்ளிக்கு நிகரான கல்வியை அரசு பள்ளிகளில் கொடுப்போம்.
  4. மருத்துவ காப்பீட்டை அரசே நிர்வகித்து நியாமான குறைந்த கட்டணத்தில் தரமான உயர்தர சிகிச்சை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க வழிவகை செய்வோம்.
  5. தொலைநோக்கு கொண்ட நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தி விவசாயத்திற்கும், குடிநீர் பிரச்சனைக்கும் தீர்வு ஏற்படுத்துவோம் . நமது நாட்டின் முதுகெலும்பாகிய விவசாயத்தை காப்போம்.
  6. விவசாய விளை பொருட்களுக்கும், நெசவு உற்பத்தி பொருட்களுக்கும் அரசே விலை நிர்ணயம் செய்து கணினி மயம் ஆக்கி இடைத்தரகர்கள் இல்லாத நிலையை கொண்டு வருவோம்
  7. பிள்ளைகளால் கைவிடப்பட்ட்ட எம் அன்பு சொந்தங்களை முதியோர் காப்பகம் அமைத்து பேணிக்காப்போம்
  8. தனியார் மயக் கொள்ளை இலாபத்தைத் தடுப்போம்! கறுப்புப் பண கள்ளச்சந்தையை ஒழிப்போம்!
  9. இலவசங்களை அளித்து நம் மக்களை கையேந்தும் நிலையை தடுப்போம். இலவசங்களை ஒழிப்போம். விலைவாசி ஏற்றத்தை தடுப்போம்.
  10. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம்.
  11. சுற்றுச்சூழலை பாதுகாப்போம். கனிம வளத்தை கொள்ளை போவதை தடுப்போம்.
  12. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வலுப்படுத்துதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் திறன் மேம்பாட்டு மய்யங்கள் நிறுவி இளைஞர்களை தொழில் முனைவோர் ஆக்குவோம்
  13. நீர்நிலைகள்‌ மாசுபடுவதை தடுப்போம்
  14. அரசியலில் நேர்மை, நாணயம்‌, உண்மை, சுயநலமின்மை கடைபிடிப்போம்
  15. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சமத்துவம், சமூக நீதி, மற்றும் பொருளாதார மேம்பாடு அடைந்த ஒரு சமூகத்தை உருவாக்குவோம்
Scroll to Top